மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஷெட்பால் என்ற கிராமத்தில் வசிக்கக்கூடிய மக்கள் பாம்புகளை தங்களோடு வளர்த்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் சுமார் 2600 பேர் வசித்து வரும் நிலையில் மக்களை விட பாம்புகள் அதிகம். இருந்தாலும் பாம்புகள் கிராம மக்களுக்கு ஆபத்து ஏதும் விளைவிக்காமல் ஒன்றாக அவர்களது இருப்பிடங்களில் வசித்து வருகின்றன. கிராம மக்கள் பாம்புகளை குடும்ப உறுப்பினர்களாக கருதுவது மட்டுமல்லாமல் குழந்தைகளும் பாம்புகளுடன் விளையாடுவது காண்போரை வியப்பில் ஆழ்த்துகின்றது.