கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியாங்குப்பம் வடக்கு தெருவில் சிவசங்கரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முந்திரி வியாபாரம் செய்து வந்தார். நேற்று அதிகாலை நெய்வேலியில் இருந்து மொபட்டில் சிவசங்கரன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சொரத்தூர் ஏரிக்கரை ரோட்டில் சென்றபோது மொபட் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சிவசங்கரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று சிவசங்கரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.