தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தளவாய்அள்ளி புதூரில் விவசாயியான சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 50-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மாலை பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் அலறி சத்தம் போட்டது. இதனால் சின்னசாமி அங்கு சென்று பார்த்தார்.

அப்போது பத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் ஆடுகளை கடித்து குதறியதை கண்டு சின்ன சாமி கூச்சலிட்டார். பின்னர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் சின்னச்சாமி நாய்களை விரட்டி அடித்தார். ஆனால் நாய்கள் கடித்ததால் 5 செம்மறி ஆடுகள் உயிரிழந்தது. மேலும் 10 ஆடுகள் படுகாயம் அடைந்தது. இதுகுறித்து வனத்துறையினரும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.