கடலூர் மாவட்டத்தில் உள்ள பி.என் பாளையம் கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மகள் உள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு சரண்யாவுக்கு வடலூரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது இந்நிலையில் பாலகுரு தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் இணைந்து 20 பவுன் தங்க நகை, ஒரு லட்சம் ரூபாய் பணம் வரதட்சணையாக கேட்டு சரண்யாவை சித்திரவதை செய்தனர்.

மேலும் அவர்கள் சரண்யாவை வீட்டை விட்டு விரட்டி விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து சரண்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் பாலகுரு உள்ளிட்ட ஐந்து பேரும் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.