தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடத்தூரை சேர்ந்த 25 பேர் வேனில் சென்றனர். பின்னர் அவர்கள் வேனில் கடத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் மொரப்பூர் செல்லும் சாலையில் சமத்துவபுரம் அருகே சென்ற போது நிலைதடுமாறிய வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மாரியம்மாள், நாகராஜ், சிவா உள்ளிட்ட 20 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த 20 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.