கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காஞ்சிரக்கோட்டில் ஜஸ்டின் என்பவர் பழைய கார்களை வாங்கி உதிரி பாகங்களை பிரித்து விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடைக்கு அருகே உதிரி பாகங்களை சேமித்து வைக்கும் குடோன் அமைந்துள்ளது. நேற்று குடோன் அருகே கழிவுகளையும், குப்பைகளையும் கொட்டி எரித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது பலத்த காற்று வீசியதால் தீ கார் உதிரி பாகங்கள் மீது வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 1/2  மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.