மதுரை மாவட்டத்திலுள்ள வடுகப்பட்டி-குலமங்கலம் செல்லும் சாலையோரம் கிணறு அமைந்துள்ளது. அந்த கிண்ணத்தில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றுக்குள் எட்டி பார்த்தனர். அப்போது 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணின் உடல் அழுகிய நிலையில் மிதந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இளம் பெண்ணின் கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை யாராவது கொலை செய்து உடலை கிணற்றில் வீசி சென்றார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.