மிக்ஜாம் புயலால் பெரும் வெள்ள பாதிப்பை சந்தித்துள்ள சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்  உள்ளிட்ட மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாணவர்களின் நலன்கருதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (08.12.2023) 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரத்தில் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய 2 தாலுகாக்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ள நிலையில், தற்போது காஞ்சிபுரத்தில் 2 தாலுகாக்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.