எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்த நிலையில் இதனை தொடர்ந்து கூடுதலாக எண்ணெய் கசிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 2301 குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக தலா 12500 ரூபாய் வீதம், எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 787 மீன்பிடி படகுகளை சரி செய்ய படகு ஒன்றுக்கு தலா 10,000 ரூபாய் வீதம் மொத்தம் மூன்று கோடி ரூபாய் அரசால் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட மீனவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.