கிறிஸ்துமஸ் பண்டிகையானது வருகிற 25 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.  பல இடங்களிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தொடங்கி இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் உள்ள புரோசன் மால் வர்த்தக வளாகம் முழுவதும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. இதனுடைய ஆங்காங்கே கிறிஸ்துமஸ் மரங்களும், அலங்கார தோரணங்களும் முகப்பு வாயிலும் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல வாடிக்கையாளர்களை கவரும்  விதமாக சுமார் 50 அடி உயரத்தில் உலக அதிசயங்களில் ஒன்றாக புகழ்பெற்ற இபிள் டவர் ஒன்றும் மிகப்பெரியதாக நிறுவப்பட்டுள்ளது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. வருகிறார் 31ம் தேதி வரை இந்த டவர் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதனுடன் ஒரு பகுதியாக அனைத்து நிறுவனங்களிலும் 10 முதல் 60% வரை தள்ளுபடி விற்பனையில் நடைபெற உள்ளது.