மழையால் பாதிப்பிற்குள்ளான தூத்துக்குடி அரசு மருத்துவமனை சரியாவதற்கு இன்னும் ஒரு மாதம் ஆகும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடையே பேசிய அவர், மலையால் பாதிக்கப்பட்ட இடங்களில் இன்றும் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மருத்துவமனை சரியாகும் வரை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.