வருடந்தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இளைஞர்கள் இரவு நேரங்களில் பைக் ரேஸில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்த பேசிய,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் குடித்துவிட்டு வாக்கம் ஒட்டினாலோ, அல்லது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பைக்குகளில் சாகசத்தில் ஈடுபட்டாலோ, அவர்களது வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.