தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்கள் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றன. இந்த நிலையில் நான்கு மாவட்டங்களிலும் வெள்ள பாதிப்பு குறைந்த பகுதிகளில் உடனே ரேஷன் கடைகளை திறந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. சில பகுதிகளில் இன்னும் ரேஷன் கடைகள் திறக்கவில்லை என தொடர்ந்து புகார் எழுந்த நிலையில் தற்போது தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.