நீலகிரி மாவட்டத்தில் தேனீர் கடை ஒன்றில் டீ போடுவதற்காக வாங்கப்பட்ட ஆவின் பாலில் வெள்ளை புழுக்கள் மிதந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆய்வுகளை மேற்கொண்ட அதிகாரிகள், பாலிலோ பால் பாக்கெட்டிலோ எந்த பிரச்சனையும் இல்லை. பால் ஊற்றிய பாத்திரத்தில்தான் பிரச்னை இருந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

நீலகிரியில் பிரீமியம் வகை பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யப்படுவது இல்லை. கோவையில் இருந்துதான் கொண்டுவரப்படும். எனவே உற்பத்தி செய்யும் இடத்திற்கு சென்று அங்கு ஆய்வு நடத்தி பார்த்ததில் மற்ற பாக்கெட்டுகளில் இவ்வாறு புழுக்கள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.