புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கவிநாடு கிழக்கு பகுதியில் வீரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நேசிகா என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற ஆண்டு வீரமணி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீரமணியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வீரமணி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.