தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏனாதி கிராமத்தில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டுக்கோட்டையில் வாடகை வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் பட்டுக்கோட்டையில் இருந்து புது வளசலில் இருக்கும் மாமனார் வீட்டிற்கு சுதாகர் வேனை ஓட்டி சென்றார். இந்நிலையில் கறம்பக்குடி பெரிய அக்னி பாலம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி மரத்தின் மீது மோதி பள்ளத்தில் உருண்டது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சுதாகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.