ஈரோடு மாவட்டத்திலுள்ள ஊசிமலை வீதியூரில் சிவலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதியில் இருக்கும் தனியார் ஹோட்டல் அருகில் தங்கி பொம்மை கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.

நேற்று காலை தான் தங்கி இருந்த அறையில் கார்த்திக் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார்த்திக்கின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.