பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அசோக் தெற்கு தெருவில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுசி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயியான முத்தழகன் என்பவர் சுசியை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.

இதனை தட்டி கேட்ட சிவகுமாரை முத்தழகன் பிளேடால் கிழித்தார். இதில் காயமடைந்த சிவகுமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முத்தழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.