தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சீங்கேரி பகுதியில் விவசாயியான பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜாமணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் பாப்பாரப்பட்டியில் இருக்கும் அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இதனையடுத்து ஜக்கசமுத்திரம் முனியப்பன் கோவில் அருகே சென்ற போது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மின் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த வாகன ஓட்டிகள் உயிருக்கு போராடி கொண்டிருந்த ராஜாமணியை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.