தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் அரசு ஊழியர்களுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. இதில் தர்மபுரி மாவட்ட இலங்கை தமிழர் முகாம் தனி தாசில்தார் அதியமான் இறகு பந்து போட்டியில் பங்கேற்று விளையாடி உள்ளார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மயங்கி விழுந்த அதியமானை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அதியமான் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், இறகு பந்து போட்டியில் கலந்துகொண்டு விளையாடிக் கொண்டிருந்த தாசில்தார் அதியமான் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்ற செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அரசு ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.