செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டி, அதே போல மகளிர் குழு, இளைஞர், இளம் பெண்கள் பாசறை.  கழகத்தினுடைய பொதுச் செயலாளர் உத்தரவுகிணங்க தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்று, வட தெற்கு – கிழக்கு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில்…. அந்தந்த இடங்களுக்கு சென்று… ஆய்வு செய்து…

அதன் அடிப்படையில் பூத் கமிட்டி அமைக்கப்பட்ட விதத்தின் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. பேரறிஞ்சர் அண்ணா அவர்கள் அடிக்கடி சொல்லுவார்கள். நாம் கொட்டி வைத்த செங்கற்களாக இருக்க கூடாது. கட்டி முடிக்கப்பட்ட கோபுரங்களாக இருக்க வேண்டும் என்ற வகையிலே…

இன்றைக்கு   அண்ணன் எடப்பாடியார் தலைமையில் 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்கள் இருக்கின்ற ஒரு மாபெரும் இயக்கம் என்ற வகையில், 2 கோடி தொண்டர்களை ஒன்றிணைத்து… ஒட்டுமொத்த  சக்தியை தேர்தலுக்கு பயன்படுத்த வேண்டும்…

நம்முடைய பிரதான எதிரி  திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற வகையிலே….  இன்றைக்கு  திட்டமிட்டு பூத் கமிட்டி, மகளிர் குழு, அதே போன்று இளைஞர் – இளம் பெண்கள் பாசனை அமைக்கப்பட்டு,  அதன் அடிப்படையில் பணிகள்  முடிக்கைவிடப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.