தமிழகத்தில் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நாளை சனிக்கிழமை சென்னை, திருவண்ணாமலை, தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், அரியலூர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் பள்ளிகள் வழங்கும் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர மற்ற 30 மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.