விடுதலை சிறுத்தைகளின் கட்சியினுடைய மாவட்டச் செயலாளர் கூட்டம் அந்த கட்சியினுடைய தலைமை அலுவலகமாக இருக்கக்கூடிய அம்பேத்கர் திடலில் நடைபெற்றது. இந்நிலையில் மாவட்ட செயலாளர்கள் பல்வேறு கோரிக்கையை தங்கள் தலைவர் திருமாவளவனிடம் தெரிவித்தார்கள். அந்த கோரிக்கையின் அடிப்படையிலே கடந்த முறை இரண்டு தொகுதிகளை நாம் பெற்றோம்.

நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரைக்கும் சிதம்பரம்,  விழுப்புரம் என இரண்டு தொகுதிகள் திமுக கூட்டணி சார்பில் நமக்கு ஒதுக்கப்பட்ட நிலையில்,  வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு நான்கு தொகுதிகளாவது  நாம் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதேபோல மூன்று தனித்தொகுதி,

ஒரு பொது தொகுதி என நான்கு தொகுதிகள்  திமுகவிடம் கேட்டு பெற வேண்டும் எனவும் விசிகவுடைய மாவட்ட செயலாளர் அவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். மேலும் ரவிக்குமாருக்கு பதிலாக புதிய ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் திருமாவளவனிடம் கோரிக்கையாக வைத்து இருக்கிறார்கள். திமுக கூட்டணியில் விசிக தான் 2ஆவது பெரிய கட்சி எனவும் VCK மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.