பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஜே.சி.டி பிரபாகரன், அருமை அண்ணன் புகழேந்தி அவர்கள் நல்ல ஒரு பாட்டு சொன்னார். நான் அண்ணன் புகழேந்திக்கு  ஒரு பாட்டு சொல்ல விரும்புகின்றேன். நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா. நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா. அந்த வரிகளை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அஞ்சு அஞ்சு வாழ்ந்தது  நாம் அல்ல என்று உலகாருக்கும் உணர்த்துகின்ற காலம் வந்து கொண்டிருக்கிறது என்பதை நான் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழகச் செயலாளர்களுக்கு என்னுடைய பாராட்டுக்களை நான்  தெரிவித்துக் கொள்கின்றேன். சற்று காலதாமதம் ஆனாலும் அண்ணன் செய்த  சுற்றுப்பயணம்  மிகப்பெரிய பலன் நமக்கு கிடைத்திருக்கிறது. அதுதான் கொள்கை பரப்புச் செயலாளர் சொன்னாரு. சொல்லுகின்ற இடம் எல்லாம் வெல்லுகிற இடம்தான் என்று அவரை வரவேற்று விதமும்,

கட்சி மாச்சரியங்களை எல்லாம் வந்துவிட்டு அவரது கரங்களை பிடித்துக் கொண்டு,  அண்ணா நீங்கள்தான் வரவேண்டும் என்று பொது மக்கள் கூறிய வார்த்தைகளும்,  ஒவ்வொரு மாவட்டத்தையும்  ஒரு மாவட்டம்  விஞ்சி நிற்கின்றது என்று சொல்லுகின்ற அளவிற்கு….  அந்த நிர்வாகிகள்  கூட்டத்தில் எழுச்சியோடு நீங்கள் எல்லாம் கலந்து கொண்டதும்,  மாவட்ட கழகச் செயலாளர்களும் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை எல்லாம் தாண்டி சிரமங்களை எல்லாம் தாண்டி நீங்கள் நடத்திய அந்த விதமும் உள்ளபடியே பாராட்டுதலுக்குரியது.

எல்லா மாவட்டச் செயலாளர்களுக்கும் பாராட்டுகளையும்,  நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்ள கடமை பட்டிருக்கின்றேன். இந்த சோதனையான நேரத்தில் துவண்டு விடாமல்,  சோர்ந்து போகாமல், துணை நின்ற அனைவருக்கு  எங்கள் நன்றி என்றைக்கும் இருக்கும். ஆனால் இப்பொழுது ஒரு தருணம் வந்திருக்கிறது. அந்த தருணத்தில் சரியான… நிலையான…. நீடிக்கின்ற…. இந்த இயக்கத்தை வாழ வைக்கின்ற ஒரு முடிவினை அண்ணன் அவர்கள் நிச்சயமாக எடுப்பார்கள் என தெரிவித்தார்.