தமிழக கோயில்களில் விரைவில் வெடிகுண்டு வெடிக்கும் என்று பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிரட்டல் குறித்து தமிழக காவல்துறைக்கு பெங்களூரு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மிரட்டல் வந்த மின்னஞ்சலை பெற்று சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். அண்மைக்காலங்களால் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.