ராஜஸ்தான் மாநிலம் பகுதியில் அதிவேகமாக வந்த இரு சக்கர வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கார் மீது மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் உள்ள ரயில்வே நிலையம் அருகே உள்ள பரபரப்பான சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து நடைபெற்றபோது, கார் ஓட்டுநர் முன்னதாகவே தனது வாகனத்தைக் கட்டுப்படுத்த முயன்ற போதிலும், பைக் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் நிலை தடுமாறி காரின் மீது மோதியுள்ளார். இந்த மோதலின் வீரியம் காரணமாக பைக்கில் வந்த இருவரில் ஒருவர் காரின் போன்ட்டின் மீது தூக்கி வீசப்பட்டதாகவும், மற்றொருவர் காரைக் தாண்டி பல அடி தூரத்திற்கு அப்பால் சாலையில் தூக்கி வீசப்பட்டதாகவும் அந்தத் தரவுகள் மூலம் தெரியவருகிறது.
View this post on Instagram
உடனடியாக அருகில் இருந்தவர்கள் மற்றும் போக்குவரத்துக் காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு படுகாயமடைந்த இரு இளைஞர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டுப் பின்னர் அவர்கள் வீடு திரும்பியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் மத்தியில் வேகக் கட்டுப்பாட்டின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை தீவிரமாக உணர்த்தியுள்ளது.
