உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் பில்ஹௌர் பகுதியில் அமைந்துள்ள மக்கன்பூர் தர்கா ஷெரீப்பில், செஹல்லும் திருவிழாவின் போது பிரசாதமாக வழங்கப்பட்ட பிரியாணியைக் கைப்பற்றுவதற்காக மக்கள் திடீரெனக் கூட்டமாக அலைமோதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது . இமாம் ஹுசைனின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்தச் சடங்கின் போது, ஒருபுறம் தாஜியாக்களைக் குளிரச் செய்யும் பணிகள் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் பொதுமக்களுக்குப் பிரியாணி விநியோகம் செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்றுள்ளது.
View this post on Instagram
அங்கு எதிர்பாராதவிதமாகத் திரண்ட இளைஞர்களின் கூட்ட நெரிசல் திடீரெனக் கட்டுப்பாட்டை மீறியதால், பிரியாணியைப் பரிமாறிக்கொண்டிருந்த தன்னார்வலர்கள் நிலைகுலைந்து அங்கிருந்து தப்பியோடினர். இதனால் ஆத்திரமூட்டிய கூட்டத்தினர் பெரிய அளவிலான பிரியாணிப் பாத்திரத்தையே கீழே தள்ளிவிட்டு அதன் மீது முண்டியடித்துக்கொண்டு விழுந்தனர். இதன் காரணமாக அங்கே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், ஒருவருடைய மீது ஒருவர் மோதிக்கொண்டதில் பலருக்கு நகக் கீறல்களும் காயங்களும் ஏற்பட்டன.
இந்தச் சம்பவத்தின் போது அங்கிருந்தவர்களில் சிலர் கைகளில் கிடைத்த பாலிதீன் பைகள், பாத்திரங்கள் மற்றும் வெறும் கைகளாலேயே பிரியாணியை வாரிச் சுருட்டிக் கொண்டு ஓடிய காட்சிகள் அங்கிருந்தவர்களால் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டன. தற்போது இந்தச் சம்பத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருவதுடன், பொதுமக்களை வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
