தமிழக சட்டப்பேரவையில் 2026-27 ஆம் நிதியாண்டுக்கான கன்னிப் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று காலை சரியாக 10 மணிக்குத் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டத் தொடர் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்ஜெட் தாக்கலுக்கு முன்னர், நிதியமைச்சர் மரிய வில்சன் முதல்வர் விஜய்யைச் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றதுடன், சபாநாயகர் பிரபாகர் தலைமையில் அவை அலுவல் தொடங்கியது.

அவையைக் கூட்டி உரையாற்றிய நிதியமைச்சர் மரிய வில்சன், தவெகவின் தேர்தல் வெற்றி என்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வெற்றி என்றும், “பிறப்பால் அனைவரும் சமம்” என்ற உன்னதக் கோட்பாட்டின் அடிப்படையில் ஊழலற்ற ஆட்சியை முதல்வர் விஜய் வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.

அதேவேளையில், மாநிலத்தின் தற்போதைய நிதிநிலை குறித்து வெளிப்படையாகப் பேசிய அவர், முந்தைய நிர்வாகங்களால் தமிழகத்தின் நிதிச்சுமை இரண்டு மடங்காக உயர்ந்திருப்பதாகவும், போதிய நிதி ஆதாரமின்றி புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதில் நிதி நெருக்கடி நிலவி வருவதாகவும் தெரிவித்தார்.

“>

 

இந்தச் சவாலான சூழலிலும் பொருளாதார மீட்சிக்குத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழ் பெண்களின் நலனுக்காகக் காத்திருக்கும் புகழ்பெற்ற ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்படும்எனவும், இதற்காகச் சிறப்பு நிதி ஒதுக்கீடாக 560 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதிரடியாக அறிவித்துள்ளார்.