பண்ரூட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய குபா கிருஷ்ணன், இதய தெய்வம்,  பொன்மலர் செம்மல் எம்ஜிஆர் அவர்களை நினைப்பவரும், பார்த்து பழகியவரும், பார்த்துக் கொண்டிருப்பவரும் ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தை பார்ப்பார்கள். வேஷ்டி கட்டிக்கொண்டு காலிலே பூட்ஸ் போட்ட ஒருவரை பார்க்க வேண்டும் என்று சொன்னால் அது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களைத் தான் பார்க்க முடியும்.  கல்லு ஷிப்பா போட்டுக்கொண்டு காலர் வைத்து,  கையிலே கம்பு வைத்து இருப்பவர் எம்ஜிஆரை தவிர வேறு யாரும் இல்லை.

ஆக அவர் எல்லா வகையிலும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு  உடை,  அலங்காரம் எல்லாமே வைத்திருப்பார்கள். ஆனால் அவருக்கு நிகராக ஒன்றைச் சொல்ல வேண்டும் என்று சொன்னால்,  புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பொதுக்குழுவை கூட்டி கட்சியை விட்டு நீக்கியவர் முன்னாள் முதலமைச்சர் மரியாதைக்குரிய கருணாநிதி அவர்கள். அதே பொதுக்குழுவை கூட்டி கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று நீக்கி,

இன்று அறிவித்திருக்கிறார்கள் என்று சொன்னால் அது அருமை அண்ணன் ஓபிஎஸ் அவர்களை எடப்பாடி செய்த தவறு.  இன்றைக்கு மீண்டும் ஒரு புரட்சித் தலைவராக நம்முடைய அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தொண்டர்களின் உரிமையை மீட்பு குழுவாக வைத்துக் கொண்டு செயல்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய மாவீரருக்கு என்னுடைய தலை சாய்ந்த வணக்கங்கள் என பேசினார்.