வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆரி முத்தூர் மேட்டூர் நரிக்குறவர் காலணியில் வீராச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 1/2 வயதுடைய ரேச்சல் என்ற பெண் குழந்தை இருந்துள்ளது நேற்று மாலை ரேச்சலின் தாய் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராதவிதமாக வாளியில் இருந்த தண்ணீரில் தலைகுப்புற விழுந்தது.

நீண்ட நேரம் ஆகியும் குழந்தை வீட்டிற்குள் வராததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் வெளியே சென்று பார்த்தனர். அப்போது தண்ணீரில் மூழ்கி குழந்தை இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.