திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொல்லாச்சேரி நான்கு ரோடு சந்திப்பு அருகே இருக்கும் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் சந்தோஷ் என்ற மாணவன் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மாணவன் மாநகர பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தபோது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தான். இதில் மாணவனின் கால்கள் மீது பேருந்து சக்கரம் ஏறி இறங்கியது.

அந்த மாணவன் சென்னைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரின் இரண்டு கால் பாதங்களும் சேதம் அடைந்தது. இதனால் அறுவை சிகிச்சை மூலம் மாணவனின் கால்கள் அகற்றப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.