தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை அறந்தாங்கி செல்லும் சாலையில் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை மற்றும் குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். சமீபத்தில் அந்த சாலையின் குறிப்பு இருக்கும் தடுப்பு சுவரில் விஷப்பாம்பு ஊர்ந்து சென்றது. மேலும் சாலையை கடந்து செல்ல வழி இல்லாமல் தவித்த பாம்பு சாலையின் குறுக்கே அங்கும் இங்கும் ஓடியது.

இதனால் வாகன ஓட்டிகள் பதற்றம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த ஓட்டுனர் மணிகண்டன் என்பவர் வாகனங்கள் ஏதும் பாம்பின் மீது ஏறி விடாமல் பாதுகாத்து வாகனங்களை ஒழுங்குபடுத்தினார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பாம்பை லாவகமாக பிடித்து காட்டுப்பகுதியில் விட்டார். அதன் பிறகு அங்கு போக்குவரத்து சீரானது.