திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெருமாள் பட்டு பகுதியில் மனோகரன்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தர்ஷினி(18), தாரணி(12) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். குறைவால் பாதிக்கப்பட்ட மனோகரனின் மனைவி வில்லிவாக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்ப்பதற்காக மனோகரன் தனது இரண்டு மகளுடன் மின்சார ரயிலில் செல்ல வேப்பம்பட்டு ரயில் நிலையத்திற்கு சென்றார்.

அவர்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரயிலில் அடிபட்டு மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான மூன்று பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.