தஞ்சாவூர் மாவட்ட தமிழ் பல்கலைக்கழகத்தில் 7 அடி உயரம் உள்ள திருக்குறள் புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ் பல்கலைக்கழகம் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை மற்றும் அகழ் கலை இலக்கிய மன்றம் பெரம்பலூர் சார்பில் 1330 திருக்குறள் சொல்லும் 1330 கதைகளையும் கொண்ட 7 அடி உயரத்தில் திருக்குறள் புத்தகம் தயாரிக்கப்பட்டது.

இந்த புத்தகத்தை பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா சென்னை தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் அம்பை அருள் ஆகியோர் வெளியிட்டனர். இந்த திருக்குறள் புத்தகத்தை மதுரையில் இருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் தியாகராஜன், பல்கலைக்கழக வளர்ச்சி தமிழ் புல முதன்மையர் குறிஞ்சி வேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.