சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை நகரில் ஐப்பசி மாதம் முதல் தேதி மற்றும் கடைசி தேதிகளில் தீர்த்தவாரி நடைபெறும். இந்நிலையில் ஐப்பசி மாதம் கடைசி தேதியை முன்னிட்டு இரண்டாம் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றுள்ளது. நகரில் இருக்கும் சிவன், ரங்கநாத பெருமாள், கோதண்ட ராமர், சிதம்பர விநாயகர், சிலம்பணி விநாயகர், கிருஷ்ணர் போன்ற சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர்.

சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பாதயாத்திரையாக வர 8 சுவாமிகளும் காந்தி பூங்காவிற்கு வந்தடைந்தனர். இதனையடுத்து சுவாமிகள் மணிமுத்து ஆற்றில் எழுந்தருளிய மூலவர்களுக்கு மஞ்சள், திரவிய பொடி, தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பால், சந்தனம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீர்த்தவாரி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசித்தனர்.