திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு கள்ளிக்குளம் பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி(22) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. நேற்று மாலை தண்ணீர் குடிப்பதற்காக வீட்டில் இருந்த மின் மோட்டார் சுவிட்சை போட்டார். இதனையடுத்து அதனை நகர்த்தி வைப்பதற்காக சுவிட்சை ஆப் செய்யாமல் கையில் தூக்கினார்.

இதனால் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று செல்வியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.