வேலூர் மாவட்டத்தில் உள்ள சேவூரில் கதிர்வேல்(75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மகன் இறந்துவிட்டார். அதன் பிறகு மகளும் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட கதிர்வேல் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெயை உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கதிர்வேலை மீட்க முயன்றனர். அதற்குள் உடல் கருகி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கதிர்வேலின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத சோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.