சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை சேர்ந்த 17 வயது சிறுவன் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது வீட்டில் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் வீட்டில் சோதனை நடத்தி 590 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சக மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை அந்த சிறுவன் விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் அந்த மாணவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.