அரியலூர் மாவட்டத்தில் உள்ள குட்டகரை காலனி தெருவில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு என்ற மகன் உள்ளார். டிப்ளமோ படித்து முடித்த சந்துருவும் பட்டதாரியான நர்மதா என்ற பெண்ணும் காதலித்து கடந்த ஒரு வருடமாக நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் கர்ப்பிணியான நர்மதாவுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையில் சந்துரு நர்மதாவை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக நர்மதா ஜெயம் கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் இரு தரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அறிவுரை வழங்கியுள்ளனர். இதனையடுத்து சந்துரு ஜெயங்கொண்டம் பகுதியில் இருக்கும் கோவிலில் வைத்து நர்மதாவை திருமணம் செய்து கொண்டார்.