கரூர் மாவட்டத்தில் உள்ள வேடிச்சிபாளையத்தில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பசுபதிபாளையம் அமராவதி ஆறு அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் சசிகுமார் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றார்.

இதுகுறித்து சசிகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சசி குமாரிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற இளையராஜா என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.