கரூர் மாவட்டத்தில் உள்ள தேக்கமலை கோவில்பட்டி பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளஞ்சியம் (21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரவக்குறிச்சியில் இருக்கும் தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல வேலைக்கு சென்ற இளஞ்சியம் மாலை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து மாணிக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் இளஞ்சியத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.