தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராகத் தடையற்ற காலவரையற்ற போராட்டம் முன்னெடுக்கப்படும் என்ற அனிதாவின் சகோதரரின் அறிவிப்புக்குப் பின்னால் அரசியல் உள்நோக்கங்கள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக மௌனம் காத்துவிட்டு, தற்போது திடீரெனப் போராட்டத்தில் குதித்துள்ளதற்கான காரணம் என்ன என்று சமூக வலைதளங்களில் பொதுமக்கள் மற்றும் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தம் தங்கை மீதான பாசத்தின் காரணமாகவே இந்தத் தீவிரப் போராட்டம் என்று கூறப்பட்டாலும், கடந்த ஐந்தாண்டு கால ஆட்சிக் காலகட்டத்திலேயோ அல்லது முந்தைய காலங்களிலோ தொடர்ச்சியாகக் குரல் கொடுக்காமல், இப்போது திடீரென விழித்தெழுந்து போராட்டத்தில் ஈடுபடுவது குறித்துப் பலரும் காரசாரமான விவாதங்களை முன்வைத்து வருகின்றனர்.

தங்கையின் நினைவாகப் போராட வேண்டும் என்ற எண்ணம் இவ்வளவு காலமாகக் கடந்து எங்கு சென்றிருந்தது என்ற நியாயமான கேள்வி தற்போது அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கிறது.

இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளில் ‘நீட் ரத்து’ என்பது ஏற்கனவே மிகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கான உரிய கால அவகாசத்தைக் கொடுக்காமல் இவ்வளவு அவசரமாகக் களமிறங்குவது ஏன் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஒருவேளை நீட் விலக்கு என்பது அவ்வளவு அவசியமான விவகாரமாக இருப்பின், மாநிலத்திற்குள் போராடுவதை விட நேரடியாக டெல்லிக்குச் சென்று போராட்டம் நடத்தலாமே என்றும், அப்படிச் செல்லும்போது தங்களது கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்க திமுக எம்பிக்களையும் உடன் அழைத்துச் செல்லலாமே என்றும் சிலர் தங்களது ஆலோசனைகளையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

“>

 

நாடாளுமன்ற வளாகக் கேண்டீன்களில் அமர்ந்து கொண்டு வெறும் பெயரளவுக்குப் பொழுதுபோக்கும் நடவடிக்கைகளில் மட்டுமே பலர் ஈடுபட்டு வருவதாகவும், ஆக்கப்பூர்வமான செயல்களில் கவனம் செலுத்துவதில்லை என்றும் இணையத்தில் குற்றச்சாட்டுகள் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.