ஈரோடு மாவட்டத்திலுள்ள வெள்ளோடு பெரிய தொட்டி பாளையத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோவையில் இருக்கும் தனியார் வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ் தனது மோட்டார் சைக்கிளில் வெள்ளோடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வேகமாக வந்த கார் ராஜேஷின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜசேகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கார் டிரைவரான முருகன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.