விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டையில் வேன் டிரைவரான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அருப்புக்கோட்டையில் இருந்து வாழை இலை ஏற்றுவதற்காக சரக்கு வேனில் பழைய வத்தலகுண்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வெங்கடாதிஸ்ரிகோட்டை பகுதியில் சென்ற போது திடீரென நெஞ்சுவலி வந்ததால் மணிகண்டன் வேனை சாலையோரம் நிறுத்தினார்.

சிறிது நேரத்தில் மணிகண்டன் மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் மணிகண்டன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.