கடலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, இறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரயில்வே மேம்பாலத்தின் கீழ் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார் என்பது தெரியவந்தது.

மேலும் ஜெயக்குமார் அப்பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஜெயக்குமாரை கைது செய்து அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.