கடலூர் மாவட்டத்தில் உள்ள கோண்டூர் ராம்நகர் விரிவு பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரிசி அலையில் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று ராமகிருஷ்ணன் வேலைக்கு சென்றதும் அவரது மனைவி மேகனா வீட்டை பூட்டிவிட்டு தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கணவன், மனைவி இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்ட அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5 பவுன் நகை, 40 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராமகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.