தர்மபுரி மாவட்டத்திலுள்ள நாகதாசன்பட்டி கிராமத்தில் கட்டிட மேஸ்திரியான மாதேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக மாதேஷ் காரிமங்கலத்திற்கு வந்து மொரப்பூர் மேம்பாலம் சர்வீஸ் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மாதேஷ் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மாதேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாதேஷின் உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.