தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லூர் பகுதியில் மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரிதா(20) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்காக 7 பவுன் தங்க நகையுடன் சென்ற சரிதா மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சரிதாவை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

ஆனாலும் அவர் கிடைக்காததால் மாதேஷின் தாய் பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் அட்டை புழுக்கை கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் தனது மருமகளை கடத்தி சென்றிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.