ஈரோடு மாவட்டத்தில் உள்ள மணல்மேடு குமாரசாமி 2-வது வீதியில் செல்வராஜ்- பூங்கொடி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்களது இளைய மகள் சந்தியா ஈரோட்டில் இருக்கும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 9-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சந்தியா மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எங்களது மகளை கண்டுபிடித்து தரவில்லை. எங்களது மகளை சூரம்பட்டி பாரதிபுரத்தை சேர்ந்த ஒரு வாலிபர் கடத்தி சென்றதாக தெரிகிறது. அவர் திருட்டு, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறை சென்று வந்தவர். அவர் எங்களது மகளை கொலை செய்து விடுவார் என அச்சத்தில் உள்ளோம். எனவே எங்களது மகளை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.