திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி ராமர் கோவில் தெருவில் கூலி தொழிலாளி ரவி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுகன்யா பழனியில் இருக்கும் தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சுகன்யா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுகன்யா உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சுகன்யாவை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுகன்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.